பக்கம்:எழில் விருத்தம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றன் வீடு கன்று மாடுகள் கத்திடக் கதவினில் கையூன்றிச் சென்ற நாட்களின் செழுமையும் வறுமையும் சிரித்தெண்ணி இன்றும் நாளையும் ஏகிடு மியல் பினை எண்ணாமல் நின்றி ருக்கநான் நின்றிடும் சிறுகுடி நீள்வீடே! 3 கோழி கூவிடக் குழந்தைகள் உறங்கிட நீள்குப்பை தாழி கூழடு புகையெனச் சிறுபுகை தலைநீட்ட மேழி ஏந்திய உழவரோ வயல்வெளி மேவாமு ன் 'வாழி செங்கதிர் வாழ்த்தினை வழங்கிடும் என்விடே 4 சோம்ப லுற்றநான் தூங்கிடத் துங்கிடத் துங்காத - ஆம்பல் போல்விழி அழகிய பெயர்த்தியர் அண்டிவந்தே தேம்பல் அன்னையர் சிறுகுளம் சென்றவர் செயலெண்ணிக் கூம்பல் நல்லிராக் குளிர்செயக் குளிர்செயும் என் வீடே! 5