பக்கம்:எழில் விருத்தம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 97 தேர்வுக்கு அதிகமானதே. ஆனால் தமிழ் மொழியறிவுக்குச் சிறிது முயன்றால் போதும் என்றேன். 'இதற்காகவா கவலைப்படுகிறாய்; போய்ப் படு; பணம் நான் தருகிறேன்; நாளைக்கே அத்தேர்வுக்குரிய சான்றிதழ் களைத் தயார் செய்' என்றார். நினைத்துப் பார்க்கின் அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையென்பேன். . . . . . . . . பணம் கட்டும்போது சிறு சிக்கல் ஏற்பட்டது. என் தந்தை நகர மன்றத் தலைவர் முன் கையொப்பமிட்டுச் சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும். ஆனால் தந்தையிடம் எப்படிக் கூறுவது என்று தயங்கிக் கொண்டிருந்தேன். இந்நிலையில் அதற்கும் அவரே வழி செய்தார். என்னைப் பாதுகாப்பவர் என்ற முறையில் கையொப்பமிட்டுச் சான்றிதழ் வாங்கித் தந்தார். நினைத்துப் பார்க்கின் அப்பெருந்தகையின் பேரன்பிற்கு எனதிரு கைக்கூப்பின்றி அவருக்கு நான் எதை ஈடுசெய்ய முடியும்? தேர்வுக்குப் பணம் கட்டி முடித்தேன். அடுத்து, தமிழறிவை வளப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பெண்ணி நடந்தேன். பாவேந்தர் மாணவர்கட்கு இலவசமாக இரவில் தன் விட்டில் தமிழ் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். நானும் அதில் பங்குகொண்டு முறையாகத் தமிழ் பயின்று வந்தேன். பாவேந்தர் கற்பிக்கும் முறையே தனிச் சிறப்புடையதாகும். நினைத்துப் பார்க்கின் அவர் கற்பித்த முறையும் கருத்தளித்த முறையும் என்னைத் தமிழில் ஈடுபடுத்திக் கொள்ளும் திருப்பு முனையாக அமைந்தது என்று இன்றும் பெருமைப்படுகிறேன். . . . முறையே இலக்கண இலக்கியங்களை அவரிடம் நன்கு பயின்றதன் காரணமாக 1934 ஆம் ஆண்டு எழுதிய