பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்



அல்லி மலர
என்னசொல்ல?
என்று சொன்னால்,
எங்கு சென்றால்,
என்ன செய்தால்

அல்லி முல்லையாக,
முல்லை மரையாக,
மரையும் அல்லி மலராக,
மாற்றத்தில் மாற்றமுற.
ஏகம் அநேகமாக,
அநேகம் ஏகமாக,

வருவது உண்டோ?
செய்வது அரிதோ?
என்று சொன்னால்?

இதில் ஏதோ மர்மம், பொருள், தத்துவம் இருப்பதாக வாசகன் குழம்பிக் கொண்டு மூளைக்கு வேலை கொடுக்க அவதிப்படட்டுமே என்பதுதான் கவிஞரின் அந்தரங்க நோக்கமாக இருக்கமுடியும்!

வசனத்தையே கவிதை என்று தருவதும் துரைஸ்வாமியின் சோதனை முயற்சிகளில் ஒன்று. ‘அறியாதவர் ஒருவருமில்லை’ என்பது கவிதையாம்.

"சுவரொட்டியாகவும், சீவனற்ற முதலையாகவும் அசட்டுத் தவிட்டு நிறம் பூண்டு, சந்தடி செய்யாது தன் இரைமீது பதுங்கிப்பாய வரும் வீட்டுப் பல்லியை அறியாதவர் யாருமில்லை.

எச்சிலால் வலைபின்னி, அதன் நடுவே தன் எண்கால் பரப்பி, வந்து சிக்கும் ஈக்கும் பூச்சிக்கும் சலனமற்றிருக்கும் சிலந்தியை அறியாதவர் ஒருவருமில்லை.

மண்டையெல்லாம் கண்ணாக, அழுகல் சிவப்பு முகமும், புழுவுடலும். சிறு இறகும், விஞ்ஞானம் ஆவிர்ப்பலித்த பேயாகவும், சுத்தா சுத்தமறியாத அபேதவாதிகயாகவும் மொய்த்துச் சலிக்கும் ஈயென்ற வொன்றை அறியாதவருமில்லை.

231