——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா
மஞ்சற் கட்டியாகி
நெஞ்சு வலியாய்த் துடிக்க
சீமுனையில் வெடித்த பல முகில்கள்
மனக் குகையின் இருள் வடிவாய்
பேய்க்கணமாய் ஆந்தையாய்ப் பரவி
வானுக்குக் கிழிந்த திரை போட
என்று மேலே மேலே போகிறது கவிதை. அதெல்லாம் ஏன் ஏற்பட்டது?
இளமைக் குவியலாய் இன்ப நுகர்ச்சியாய் ஆடிப் பாடிய நான் ஒரே கனத்தில் விரக்தி வடிவாகி நரைக்கக் காரணம். கன்னி ஒருத்தி அவன் ஆசையோடு நெருங்கிக் கேட்டபோது, அவள்
'தனி ஊசல் போல
இடவலமாய் தலையசைத்' ததுதான்!
காதல் தோல்வி கண்ட விரக்தி உள்ளத்தின் வாழ்க்கைச் சூன்ய நோக்கை இக்கவிதை சித்திரிக்கிறது.
‘இருளின் நிழல்’ என்பதும் ‘சாக்காட்டு உலகில்
என்னை விட்டு கூடு விட்ட பறவையென
ஓடிமறைந்த பெண்ணை எண்ணிப்பித்துற்ற மனசின் விரக்திப் புலம்பல்தான்.
'கதவை மூடு' வேறு தொனியில் அமைந்துள்ளது. ஆயினும் இதிலும் விரக்தியே மேலோங்கி நிற்கிறது.
கதவை மூடு
வீங்கி விரிந்த மாநிலம்
துவண்டு விழுந்தால் ஆறடி;
வாழ விட்ட பூமகள்
234