பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



கலைமேவும் அவள் குழலைக் காற்றிலே கோதி விடு அலைக்கும் அவள் மார்பை அல்லிக்கொடி அணைக்க விடு

மருண்ட முகம் தெளியத் திருமஞ்சள் பூசி விடு ஈதனைத்தும் செய்துவிட்டு இதமான கவிதைகளால் ஒத்தடங்கள் கொடுத்து விடு உடலெங்கும் தேன் பூசிப் பத்திரமாய்ப் பெண்ணிவளை வான்முனையில் கொண்டு விடு இருட்டு முடியுமுன்னே, இரவு முடியுமுன்னே திருஷ்டி கழித்தவளைத் திருப்பி யனுப்பிவிடு

இவ்வாறு இன்னும் பல வரிகளைக் கொண்டது இக்கவிதை. இதற்கு ‘ஒட்டும்’ ‘வெட்டும்’ ஆக இரண்டு கவிதைகள் எழுதினார் தி. சோ. வேணுகோபாலன்.

கற்பனை விரிவும் கருத்தாழமும் உணர்வோட்டமும் கொண்ட கவிதைகள் அவை. நிலவைக் கற்பரசியாகக் கொண்டும் நாணமில்லாப் பரத்தையாகக் கொண்டும் ஒட்டும் வெட்டும் படைக்கப் பட்டுள்ளன. இவை ‘எழுத்து’ 36-ம் ஏட்டில் இடம் பெற்றன.

‘எழுத்து’ 38-வது இதழ் அருமையானகவிதைகள் பலவற்றுடன் விளங்கியது. வேணுகோபாலனின் ‘ஒட்டும் வெட்டும்’ டி.கே.துரைஸ்வாமியின் பேதாபேதம், அலங்காரம்,சிலேடை ஆகிய ‘மூன்று கவிதைகள்’ இவற்றுடன் டி.சி. ராமலிங்கம் (தரும சிவராமு) கவிதைகள் ஐந்தும் இதில் வெளி வந்தன.

படிமச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகப் பலரால் பல இடங்களில் கையாளப் பெற்றுள்ள ‘விடிவு’ இல் ஐந்து கவிதைகளில் ஒன்று.

பூமித் தோலில்
அழகுத் தேமல்
பரிதி புணர்ந்து
படரும் விந்து
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ
இருளின் சிறகைத்

236