——————————————————————————————எழுத்து - சி.சு.செல்லப்பா
- நல்முத்தும்
- வர்ணம்பூசின வெறும் எலும்பு
- சுண்ணாம்பு பாஸ்பேட்
- ஸோடா கார்பனேட் தானா?
(எழுத்து 54)
விஞ்ஞான உண்மையை நயமான கவிதையாக்கிக் காட்டுகிறது. நா.வெங்கட்ராமனின் 'அந்தி' எனும் படைப்பு.
துயிலுமுன் பரிதி
தூக்கி யெறிந்த
வெள்ளை வெற்றிலைக் காம்புகளை
ஆகாசத் தூசுக்கும்பல்
பொறுக்கி
மென்று
உமிழ்ந்த
எச்சில்
(எழுத்து 65)
கவிதையில் கால காலமாகக் கையாளப்பட்டு நைந்து போன விஷயத்துக்குக் கூடப் புதுமை சேர்க்க இயலுமா என்று புதுக்கவிதை சோதனை செய்யத் தயங்கவில்லை. நிலவு இம்முயற்சிக்கும் கை கொடுக்கிறது.
‘கிணற்றில் விழுந்த நிலவு’ என்.எஸ். வைதீஸ்வரன் எழுதியதையும், நிலவை கற்புக்கரசியாகக் கண்டும், நாணமிலாப் பரத்தையாகக் கொண்டும் தி.சோ. வேணுகோபாலன் ஒட்டும் வெட்டுமாக இரு கவிதைகள் படைத்ததையும் முன்னரே குறிப்பிட்டுள்ளேன். வேறு கோணங்களிலும் நிலவைப் பார்க்கிறார்கள் சிலர்.
விட்டெறிந்த இட்டலியோ
கட்டிவைத்த பழஞ்சோறோ
கொட்டி விட்ட கப் தயிரோ
சுட்டு வைத்த அப்பந் தானோ?
என்ன இழவேயானாலும்
எட்ட இருந்து சிமிட்டுது கண்
கிட்ட வந்து எட்டவில்லை
258