பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'க.நா.சு.கருத்து'


1963 இறுதியில் தோன்றியது க.நா.சுப்ரமணியத்தின் இலக்கிய வட்டம், மாதம் இருமுறை. அதன் இதழ்களில் புதுக் கவிதை போதிய இடம்பெற்று வந்தது.

‘இலக்கிய துறையில் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன - இன்றைய தமிழ் இலக்கிய வளம் பெருக என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இலக்கிய வட்டம்” பத்திரிகையில், நமக்கு நாமே பல விஷயங்களையும் தெளிவு செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன், அதன் ஆசிரியரும் மற்றும் சில எழுத்தாளர்களும் எழுதிக் கொண்டிருந்தார்கள். அதனால், 'இலக்கியவட்டம்' நல்ல இலக்கியப் பத்திரிகையாக விளங்கியது. எழுத்தாளர்களுக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் பயன்படக் கூடிய அருமையான விஷயங்கள் ஒவ்வொரு இதழிலும் பிரசுரமாயின. ‘இ.வ. சுவாரஸ்யமான ஒரு இலக்கிய ஏடு ஆகவும் வளர்ந்து வந்தது.

அது ஒரு வருஷமும் சில மாதங்களும் தான் உயிரோடிருந்தது. என்று நினைக்கிறேன்.

“இலக்கிய வட்டம் புதுக்கவிதையையும் ஒருசோதனைத் துறை ஆகத்தான் கருதியது. பிச்சமூர்த்தியின் படைப்புகளை புதுக் கவிதை'யாக அது அங்கீகரிக்கவில்லை.

அதன் 25வது இதழில் வெளிவந்த அபிப்பிராயம் இது -

266