——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா
லஷியத்தச்சன் தேடிக்கைப்பிரம்பு இழைப்பதும்,உருப்படாத வழியில் பானைவனையும் குயவனின் பாண்டம் உருக்குலைவதும், உருக்குலைந்த சிறகொடிந்த - வலிகுன்றிய சிந்தனைகள். இவை இன்று கவிதையேயாக மாட்டா.
புதுக்கவிதை புது வாழ்வின் எதிரொலியாம். வாழ்க்கையின் இன்றையச் சிக்கலை சிக்கலாகக் காட்டும் சிந்தனை வெறியாம். சிக்கலைச் சுலபமாக்கி சுகம்தேடும் மனப்பிராந்தி அன்று.
புதுக்கவிதை சங்ககாலத்துப் பேச்சுச் சந்தத்தை அஸ்திவாரமாக்கிக் கொண்டு எழுதக்கூடாது என்பதில்லை.
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்கிற சந்தம் எல்லா காலத்துக்கும் பொதுவானது தான்.
புதுக்கவிதை ஏமாற்றத்தை, ஏக்கத்தைத்தான் எதிரொலிக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை.
மேலை நாடுகளில் அப்படியென்றால், ஆனைக்கு அர்ரம் என்பதில்லை.
புதுக்கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் போல, விமர்சனம் போல, இலக்கியத்தில் - தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுத்துறை.
அது இன்னும் கவிதையாகி விடவில்லை.
புதுக்கவிதை எழுதுகிற பத்திருபதுபேர் தொடர்ந்து எழுதி வந்தால் புதுக்கவிதை கவிதையாகிற பக்குவம் பெறலாம்.
அதுவரை அது ஒரு சோதனைத் துறை
(இலக்கிய வட்டம் 23-10-84)
சோதனை ரீதியில் கவிதை படைத்து வந்த அமெரிக்க, ஐரோப்பியக் கவிஞர்கள் பலரது கவிதைகளின் மொழிபெயர்ப்பு இலக்கிய வட்டம் இதழ்களில் பிரசுரமாயின.
க.நா.சு. மயன்' என்ற பெயரில் கவிதைச் சோதனைகள் நடத்தி வந்தார். அவரது சோதனை முயற்சிக்கு ஒரு உதாரணமாக ‘முச்சங்கம்' என்பதைத் தருகிறேன்.
268