இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா
பிரகாசிக்கும். லீலு சந்தோஷத்தால் துள்ளிக் குதிப்பாள். எல்லோருக்கும் ஆனந்தம்தான்...ஏன்? தனக்கு... கல்யாணிக்கு. ஏதோ தொண்டையில் அடைப்பது போலிருந்தது.
திடீரென்று பாட்டி விழித்துக்கொண்டாள்.
“ஏம்மா கல்யாணி... என்ன? ஏன் அழறே? என்னம்மா செய்றது?’ என்று பரிவுடன் கேட்டாள்.
கல்யாணி பதில் சொல்ல சிறிது நேரம் ஆயிற்று, கண்களைத் துடைத்துக்கொண்டு புரண்டு படுத்தாள்.
‘ஒன்றுமில்லையே’ என்று சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டாள். அழக்கூட அவளால் முடியவில்லை.