பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

29



12. துரோணரின் மகள்

வில் ஆசிரியர் துரோணருக்கு ஒரு மகன் இருப்பது தான் நமக்குத் தெரியும். அவன் பெயர் அசுவத்தாமன். அவன் சிரஞ்சீவி.

துரோணருக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அவள் பெயர் சாந்தா என்றும் நாடோடிக் கதை ஒன்று கூறுகின்றது. அவள் வரலாறு அற்புதமானது. அதைச் சிறிது காண்போம்.

ஒரு நாள் துரோணர் வீட்டில் இறை வழிபாடு செய்து கொண்டிருந்தார்.

அவ்வூரில் திருக்குலத்து அடியார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சேதா. மிக்க பக்திமானாக இருந்தமையால் பக்த சேதா என்று அழைக்கப்பட்டார்.

அவர் மனைவி பெயர் காந்தா, அவர்களுக்கு ஒரு மகள் அவள் பெயர் சேவா.

துரோணர் வீட்டில் வழிபாடு நடப்பதைப் போலத் தன் வீட்டிலும் வழிபாடு நடத்தல் வேண்டும் என்பது சேவாவின் ஆசை. வழிபாட்டுக்கு மலர் வேண்டுமே!

தன். தந்தை தைத்த செருப்புக்களைத் துரோணரின் சீடரிடம் கொண்டு போய்த்தந்து, அவர்களிடம் மலர்களை வாங்கிவந்து, தன் தந்தையிடம் இறை வழிபாட்டுக்குத் தந்தாள் சேவா.

“செருப்புக்கு மலர் மட்டும் விலையாகுமா? மேலும் பணம் கேட்டு வாங்கி வா” என்று காந்தா தன் மகளைத் துரோணர் வீட்டுக்கு அனுப்பினாள்.

அங்குச் சென்ற சேவா, துரோனர் மகள் சாந்தாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “என் தந்தை படைக்கும் நைவேத்யத்தைப் பகவான் நேரில் வந்து உண்கின்றார்” என்றாள்.