பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகு தள்ளும் பாட்டு 105。

ஆளுய்ப் பிறந்ததில்லை; அரைஞாணும் கட்டலையோ? கட்டிலுண்டு சாவலுண்டு -உனக்குக்-கால்புடிக்கத்

தாதியுண்டு; உடுக்கத் துகிலுமுண்டு: செலவழிக்க ரொக்கமுண்டு: என்னவென்று சொல்லுவனே? எழுதுவனே ஒலயிலே.ே ஒலை கருகமணி, ஒருகழுத்துச் சங்குமணி பாலாக் கருகமணி, பசங்களுக்கே சங்குமணி: சங்கு முழங்கிவரச் சங்கரளுர் கோவிலிலே; கோவிலும் தாரமம்மா குழந்தைமனம் காதமம்மா, மாளிகையும் தூரமம்மா: மைந்தன்முகம் காதமம்மா; காகம் பறவாது: கருங்குருவி நாடாது; சிட்டுப் பறவாது; செங்குருமான் நாடாது; காடுதங்கி வாமகனே, கல்லசேதி சொல்லட்டுமா? ஊருதங்கி வாமகனே, உத்தசேதி சொல்லட்டுமா? ஊருக் கதிகாரி உள்ளுரு வெள்ளாளச்சி: நாட்டுக் கதிகாரி நம்மளுரு வெள்ளாளச்சி;

வெள்ளாளப் பொண்டுகளா, விளையாடும் பார்வதியே!