பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்றப் பாட்டு

அன்னகடைப் பொண்ணே, அழகுசித்ர மயிலே, அஞ்சாச்சே யானை அம்பதியால் எட்டு; அம்பதியால் ஏழு.அம்பதியால் ரெண்டு.

அம்பாரம்போட் டானே, தென்பழனி நெல்லே. நாலாச்சே பானை, நாற்பதியால் எட்டு; நாற்பதியால் ஏழு. நாற்பதியால் ரெண்டு.

(நல்லதொரு பட்டணம்) நாகப் பட்டணம் வந்திறங்கும் கப்பல்; கப்பல்சரக் கென்ன? மஞ்சள் ஒரு தூக்கு, இஞ்சிஒரு தூக்கு, மூணிலம் பதுவோ? முப்பதியால் எட்டு; முப்பதியால் ஏழு., முப்பதியால் ரெண்டு; முன்னேவார பொண்ணே? என்னஎன்ன சொன்னாள்? ஈரந்தண்மை வீச இருபதியால் எட்டு; இருபதியால் ஏழு. இருபதியால் ரெண்டு. இருப்புலக்கை த்து ணு, துலுக்கப்பள்ளி வாசல். 'ஒடிமடை மாற ஒருபதியால் எட்டு; . ஒருபதியால் ஏழு. ஒருபதியால் ரெண்டு; ஒருவன் தாண்டா அல்லா, உலக மெல்லாம் ஆள்வான். எட்டாச்சா பானே? எட்டுடனே வாரோம்.

~g این

ஆதிபெரி யோனே, ஆபத்து வராமே மூணு வரிமூனு. எட்டுவரி எட்டு. எட்டியம்மா தாயே, ஒடிவா தாயே, ஒருபதியால் ரெண்டு. ஒருபதியால் எட்டு,

ஒடிமுத்தி தேங்க ஒடைச்சார்புள்ளி பார்க்க; இருபதியால் ரெண்டு. இருபதியால் எட்டு.

(பா-ம்.)."தன்மை, ஈருந்தன்மை.