இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஒரு மனிதனுக்குத் தன் நாட்டின் மன்னரைக் காணவேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. தன் நண்பன் ஒருவனிடத்தில் தன் ஆசையை எடுத்துச் சொன்னான். அவன் அரண்மனையில் வேலை பார்க்கும் ஒரு நண்பனிடம் சொல்லி அந்த மனிதனை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தான்.
ஒரு குறிப்பிட்ட நாளன்று அந்த மனிதன், அரண்மனை வேலைக்காரனுடன் மன்னரைக் காணப் புறப்பட்டான்.
இருவரும் அரண்மனையை அடைந்தார்கள். முதல் வாசலைக் கடந்தவுடன், அங்கே, யிருந்த கூடத்தின் நடுவில் ஒருவன் பகட்டான உடையணிந்து அமர்ந்திருந்தான்.