பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



'சங்கத் தமிழ் மூன்றுந் தா"


உலகநீதி


உலகநாதர் இயற்றியது
                          காப்பு

உலக நீதிப் புராணத்தை உரைக்கவே
கலைக ளாய்வருங் கரிமுகன் காப்பு.


                        பாட்டு 1

ஒதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
     ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
     வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
     போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் -
      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

                     பாட்டு 2

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
     நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
     நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
     அடுத்த்வரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாடும் குறவருடை வள்ளி பங்கன்
     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

                    பாட்டு 3

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
     மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனந்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
     தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினந்தேடி அல்லலையுந் தேட வேண்டாம்
     சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன்
     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே,

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/77&oldid=1332766" இலிருந்து மீள்விக்கப்பட்டது