பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 19.5.85 இன்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குறிப் பினை எழுதி முடித்தேன். நாள் உருண்டோடிக் கொண்டு செல்வதை நினைத்தேன். சென்ற ஞாயிறு அன்று இதே சிகாகோ வந்தேன். இன்று ஞாயிறு:-ஒரு வாரம் ஒடி விட்டது. இன்று காலையில் திரு. முருகேசன் அவர்கள் (சென்னை டாக்டர் நடராசன் அவர்தம் மருகர்) வீட்டிற்கு வருவதாகக் கூறினார். அவர்தம் துணைவியார் ஊருக்குச் சென்றிருப்பதாலும், எனக்கும் தொடர்ந்து பணிகள் இருந் தமையாலும் அவர் வீட்டிற்கு நான் செல்லமுடியாத நிலை யிலும் அவரே வருவதாக இருந்தார். காலையில் லாஸ் ஏஞ்சலிஸ், சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களிலிருந்து தொலைபேசியில் தகவல் வரவும் நான் புறப்பட்டு அங்கு வரும் நாள் நேரம் விமானம் முதலியன பற்றிய குறிப்புக் களைத் தந்தேன். பின் இன்று வெளியில் எங்கும் செல்ல வில்லையாதலால் மேசை மேல் இருந்த சில நூல்களைப் பயின்றேன். நான் தங்கிய இல்லந்தோறும் பொறியாளர், மருத்துவர் போன்றவரும் பள்ளிச் சிறுவரும் இருந்தமையின் எங்கும் நல்ல நூல்கள் இருந்தன. சிலசிற் சமயங்களில் ஒய்வாகச் சில நூல்களைப் படிப்பதுண்டு. அப்படியே இங்கும் காலைச் சிற்றுண்டிக்குப் பின் சில நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இவர் தமிழ்ப் பற்றும் பயிற்சி யும் உடையவராதலின் நல்ல பல தமிழ் நூல்களையும் வைத் திருந்தார். -