பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

________________

11 "நான் ஒரு குற்றமும் செய்யவில்ேைய" என்று கதறிக் கொண்டிருந்த டிரைபசுக்கு, வெற்றி, விடுதலை! பதினொரு ஆண்டுகள் பராரியாகப் பாழும் தீவில் வதைபட்டவனுக்கு, வெற்றி, விடுதலை ; ஜோலாவின், எழுத்தால்!! ஒரு பிரெஞ்சு - ஜெர்மன் சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருந்தசமயம், பிரெஞ்சுஒற்றனெரு வன் ஜெர்மன் படைத்தலைவரின் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது சிறிய குறிப்பொன்று அவன கையில் சிக்கியது. அதை அவன் உடனே பிரெஞ்சு படைத் தலைமை இடத் திற்கு அனுப்பினான். அந்தக குறிப்பில் பிரெஞ்சு நாட்டுக்கு உயிர்போன்ற படையமைப்பு இரசுசி யங்கள் எழுதப்பட்டிருந்தன. அந்த இரகசியங்கள் படைத்தலைமைக் குழுவினருக்கு மட்டுமே தெரிந் திருக்க முடியும் யார் அந்தத் துரோகி? படைத் தலைவர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். கடைசி யாக ஆல்பிரட்டிரைபல் என்பவர் மீது குற்றம் சுமத்தப் பட்டது. உண்மையில் அந்தத் துரோகத்தைச் செய்தவன் எஸ்டர் ஹேஸி என்பவன். படைத் தலைமைக் குழுவில் செல்வாக்குப் பெற்றிருந்த எஸ்டர் ஹேஸியின் நண்பர்கள், டிரைபஸ்மீது வழக்குத் தொடுத்தனர். அவசரமாக 1895ம் ஆண்டுடிரைபஸ் இராணுவமன்றத்தால் குற்றஞ் சுமத்தப்பட்டு, அந்தமான் போன்ற டெவில்ஸ் தீவுக்கு அனுப்பப்பட்டான் தண்டிக்கப் பட்ட உடனேயே அவன் வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டான். பெரிய மைதானத் தில் அவனுடைய படைவாளும், இராணுவச்சின் னங்களும் பிடுங்கப்பட்டன. கூடியிருந்த மக்களும் 'ஒழிக டிரைபஸ்' என முழங்கினர். கடல் முழக்