பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

________________

முள்ள அரசாங்கம் அனைத்தையும் எதிர்த்துத் தனியனாக நாட்டையும் வீட்டையும் விட்டோடிப் போராடிய திறத்திற்காக ஜோலா உலக வரலாற் றிலே இடம்பெற்றுவிட்டார்..பிரான்சு நாட்டிற் குப் பலவகைகளில் தன் உழைப்பைச் செலுத்த லாம் ஒருவன். வாளேந்தியோ, பேனாவைப் பிடித்தோ தன்கடமையை நிறைவேற்றலாம்; என் பங்கில் எமிலி ஜோலா என்ற பெயரை வருங்காலத் திற்கு வழங்குகிறேன். அது இரண்டிலொன்றை ஆராய்ந்து அடைவதாக என்று ஜோலா கூறி னார். வருங்காலம் - பின் சந்ததி ஜோலாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஜோலா ஓய்வே யறியாத உழைப்பாளி. அவருடைய வாழ்வு ஏமாற்றங்கள் நிறைந்ததா யிருந்தது. குறிப்பாக பிரெஞ்சு இலக்கிய மன்றம் அவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க மறுத் தது. ஆனால் பிரெஞ்சு மொழி இலக்கிய ஆசிரிய வல்ல, உலக இலகசியத்தில் இடத்தை ஜோலா அடைந்து விட்டார். உயர்ந்த எதை எழுதுவது? என்றோர் நாள் நம் கவிஞ ருக்குச் சந்தேகம் பிறந்தது. தாமரை தன் அழ கைக் காட்டி, எழுதச் சொல்லிற்றாம், காடும கழனி யும்,கார்முகிலும், கலாப மயிலும், மயிலனைய மாத ரும், செவ்வானமும்,அன்னமும்,வீரமும் பிறவும், என்னைப்பற்றி எழுது! என் எழிலைப்பற்றித் தீட்டு என்று கூவின. கவிஞர் கூறுகிறார் கேளுங்கள், ஜோலாவின் உணர்ச்சி அதிலே ளதைக் காணுங்கள். 'ஜன்னலிலே, தமிழ் நாட்டினிலே யுள்ள என் தமிழ் மக்கள் துயின்றிருந்தார் அன்னதோர் காட்சி அரக்க முண்டாக்கி யென் ஆவியில் வந்து கலந்ததுவே!'"