பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

சீதை
வாங்கியது கடனல்ல. வார்த்தையே கடன்.
நன்னரசை தாரை வார்த்துக் கொடுத்து
வட்டிக் கடனுக்கு கட்டியவளை விற்று
செங்கோலிருந்த கரத்தில் சுடுகோலேந்தினான்
அயோத்திக்கு அரசன் அரிச்சந்திரன் என்பார்
அவன்வழி வந்த பேரன் ராமச்சந்திரன்
சம்பரன் போரில் தசரத மன்னர்
பிள்ளைகளே பிறவாத ஒரு காலத்தில்
இளையவளை மகிழ்விக்க நின் பிள்ளைக்கே முடி என்றார்
பின்னவனாய்ப் பிறந்த அந்தப் பிள்ளை மறுத்தான்
தந்தையே தந்த வரத்தை வெறுத்தார்.
ஆயினும் வம்சத்தின் வார்த்தைபெரிது என்று
மாரத்தை இழந்தவன் தாரக ராமன்.
மகரிஷி ஜனகனுக்கு மகளாகப் பிறந்தேன்
மாமியரும் என்னை மகளாக வளர்த்தார்
எனக்கும் ஒரு மானை வளர்க்க ஆசை
ஆசை தீது என்பதை அறிவுறுத்த
வந்த கேடோ பெரிதினும் பெரிது.
மிதிலையில் மாலையிட்ட நாள் முதலாய்
வல்லரக்கன் எனை சிறை எடுத்த நாள் வரை
சுகத்திலிருந்தேன். சொர்க்கம் என்னோடிருந்தது.
நரகத்தின் உணர்வை நானறியவோ
தெய்வம் தண்டித்தது தீயில் வேகின்றேன்.
பரதன் பாட்டன் வீடு செல்லாதிருந்தால்