பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28

யில் நடந்து நல்வாழ்வு வாழ்ந்து செல்லக் கண்ணுகளாகத் திகழவேண்டும் என்பதே எனது ஆசை எனக்கென்ன! காடு, வா! வா! என்கிறது ... என்றோ ஒரு நேரத்தில்...

செல்லமும் கண்ணும் : பாட்டி! பாட்டி!! அப்படிச் செய்துவிடாதீர்கள். எங்கள் குழந்தைகளையும் கண்டு வாழ்த்திவிட்டு அப்புறம்தான் பிரியவேண்டும்.

பாட்டி : உங்கள் எண்ணம் வலிமை மிகுந்ததாக இருக்குமானால், அப்படியே நடைபெறும். நேரம், ஆகிறது. போய்ப் படியுங்கள்.

இருவரும் : வணக்கம் பாட்டி! வணக்கம்!