இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரளுர்
'மற்றவர் சேர&னத்
துரக்கியென் கைதந்து, "மகளே! இக் குழவியைப்பேண்-எனச் சொற்றவர் செம்மலைக்
கைப்பிடி யாய்க்கொண்டு சென்று மறைந்து விட்டார்!’-என் துற்ற கருவைச்
செவந்தியின் அன்னேக் குரைத்துக்கண் ணிர்பொழிந்தாள்-தான் பெற்றவள் அல்லவள்
ஆயினும் துன்பெனும் பெண்மைக்கத் தாயழுதாள்!
ஆங்கவர் பேசி
யிருக்கையி லே,சிலர் அங்குவத் துற்றனரே!-சீர் தாங்கிய அன்னவர்
தம்மில் செவந்தியின் தந்தையும் நின்றிருந்தார்1- அவர் "ஈங்கிவன் தான் ஐயை
என்னும் பெயரினள்! இவளத்தை முத்தம்மையே'-என ஆங்கவர் சொன்னதும்
அவருள் உயர்ந்தவர் ஐயை முன் வந்துரைப்பார்;
33