பக்கம்:ஐயை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

கொட்டிவில்லை; நிரைகளில்இல;

குன்றுசெல்வ தில்லை; குட்டியுடன் மறிகளிடும்

குரலொலியும் இல்லை; கட்டலில்லை எனமலர்கள்

கவின்மலர்த்த வில்லை; கவலையில்லை; மகிழ்ச்சியில்லை; கண்துயில்வ தில்லை ; நட்டலில்லே, நகைத்தலில்லை;

நலமுரைப்ப தில்லை; நாலு வகைக் காய்கறிகள்

நாச்சுவைப்ப தில்லை; பொட்டுமில்லை; பூவுமில்லை;

பூசுமஞ்சள் இல்லை; பொக்கெனவே ம்னமவியப் X

பொய் வாழ்வு வாழ்ந்தாள்: 2

மொய்குழலில் நெய்யில்லை;

முழுப்பின்ன வில்லை; முழுமதியைத் தோற்கடிக்கும்

முகத்திலொளி இல்லை; ஐவணஞ்சேர் உகிரில்லை;

அணிவளைகள் இல்லை; அரும்புமுல்லைப் பல்தெறிக்கும்

அழகுசிரிப் பில்லை;

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/109&oldid=1273570" இலிருந்து மீள்விக்கப்பட்டது