இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரளுர்
கொட்டிவில்லை; நிரைகளில்இல;
குன்றுசெல்வ தில்லை; குட்டியுடன் மறிகளிடும்
குரலொலியும் இல்லை; கட்டலில்லை எனமலர்கள்
கவின்மலர்த்த வில்லை; கவலையில்லை; மகிழ்ச்சியில்லை; கண்துயில்வ தில்லை ; நட்டலில்லே, நகைத்தலில்லை;
நலமுரைப்ப தில்லை; நாலு வகைக் காய்கறிகள்
நாச்சுவைப்ப தில்லை; பொட்டுமில்லை; பூவுமில்லை;
பூசுமஞ்சள் இல்லை; பொக்கெனவே ம்னமவியப் X
பொய் வாழ்வு வாழ்ந்தாள்: 2
மொய்குழலில் நெய்யில்லை;
முழுப்பின்ன வில்லை; முழுமதியைத் தோற்கடிக்கும்
முகத்திலொளி இல்லை; ஐவணஞ்சேர் உகிரில்லை;
அணிவளைகள் இல்லை; அரும்புமுல்லைப் பல்தெறிக்கும்
அழகுசிரிப் பில்லை;
39