இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அவ்வொளியும் வழியும் உங்கள் வாழ்க்கைப் பயணத்திற்கு ஒர் அண்மதியையும் தெளிவையும் தருமானல் அதுவே ஐயையை நான் கண்டு காட்டியதற்குப் பயனும் பரிசும் ஆகும்.
மேலோட்டமும் ஆரவாரமும் நிறைந்த இக்கால வாழ்வின் பிடிப்புகளிலிருந்து, சற்றே உங்கட்குத் தொலைவான, ஆழமான ஓர் உண்மை உள்ளத்தின் நெளிவு சுழிவு களைக் காட்டியிருக்கின்றேன்.
அவற்றைக்கண்டு, காய்ந்து கிடக்கும் மனத்தின் போலிச் சருகுகளே உதிர்த்து விடுங்கள்! அவை ஒன்றுக்கும் உதவாதவை; உங்கட்கும் சுமையானவை!
ஐயை அத்துறையில் எல்லார்க்கும்-குறிப்பாகப் பெண்கள்
எல்லார்க்கும் வழி காட்டியாக விளங்கட்டும்!
அன்பன்,
பெருஞ்சித்திரன்.
படையல்
இன்பினும் துன்பினும் எனையக லாமல் அன்பினும் பணியினும் அயரா துதவிடும் பெண்ணின் நல்லாள் தீதிலாப் பேதை தண்ணியள் மனைவி தாமரைக் கிதுவே!