பக்கம்:ஐயை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

நில இருவிழி சோரும்வரை, அவன் நின்றிருந்த எழில் தான் பருகிக்

கோல மயில் நெஞ்சின் ஏக்கந் தணியாமல்

கொஞ்சநே ம் பேசக் கெஞ்சியதும்,

"காலம் வரட்டும்,நீ காத்திருப் பாய்”எனக்

கன்னிக் குரைத்து மறுத்ததுவும்:

ஏல மொழிவிழி நீருகுத்தே, பின்னர்

ஏகியதும் எண்ணி நெஞ்சவிழ்ந்தாள்! 5

வெள்ளிநிலாமுகப் பெண் வாக் கண்டதும், விசிய காய்ச்சலும் தண்புனலில் கொள்ளி யணைந்தது போலடங் கிக்குளிர்

கொண்டதும், பொய்த்துயில் கண்டதுவும், பள்ளி துறந்துகல் லூரிசென் ஒரு

பான்மையில் காலஞ்செய் கோலமதும், உள்ளி மகிழ்ந்தனள், ஐயையும் பின்துயி

லுற்றனள் சேரன் துயின் றிலனே! 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/141&oldid=1273602" இலிருந்து மீள்விக்கப்பட்டது