இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஜயை-2-ஆம் பகுதி
'கருவினில் திருவாய்ந் துள்ளக்
கசடிலார் புரப்பின் வாழ்ந்தே,
உருவினுந் திருவாய்ந்(து) ஊறும்
உரையினும் நிறைவு பெற்று,
மருவிலா மனமும் கொண்டாள்
மங்கையாள் நெய்தல்’ என்று
வருவதொன் றுரைப்பாள் போல
வாய்மையான் கேட்பச் சொன்னுள்!
அன்னையோ டவ8ள வீட்டிற்
கழைத்ததை மகிழ்ந்து சொல்லி முன்னையக் குறிஞ்சி நோக்கை
முறித்ததும், நெய்தல் உள்ளம் தன்னைநன் நிறைவு செய்த -
தகைமையும் எடுத்துக் கூறி, "என்னையோ அவள்பால் நெஞ்சம்
இ&னவதே!' என வி யந்தாள்!
'அறிவினும் அழகி னுைம்
அமைவுறும் உள்ளத் தானும்
செறிவுறத் தோன்றும் நெய்தல்
சோற்கு வாய்த்து விட்டால்,
முறிவுற்ற தனது நெஞ்சம்
முழுமையுற் றுவகை எய்தும்!
குறியெதோ இறைவற் குற்ற
கோளெதோ வென நினைந்தாள்!
98.