ஐயை-2-ஆம் பகுதி
அன்னை உடல்நலம் குன்றியதும்-சேரன்
ஆரா உளத்துயர் கொண்டுவிட்டான்! "முன்னே யிருந்த மகிழ்ச்சியில்லை-அன்னை
மொய்குழல் பற்றியே எண்ணுகின் ருர்!
என்னை யி தசம் ஒரு பெண் வரவுக்-கிவர்
ஏங்கி வருந்தும் வகையெதுவோ?
அன்னவ ளும் அன்று சொன்னதுபோல் - என்
அங்கு வரவில்லை?" என்றுநொந்தான்!
'நெய்தலைக் கண்டதும் ஒர்முறைதான்-அங்கு
நின்றுரை பாடிய தும்,நொடிதான்!
எய்திய துன்பமோ குன்றளவாய்-வந்தே
எங்ங்ணம் அன்&னயைப் பற்றிவிடும்?
மெய்தவழ் நெஞ்சில் அவள் நினைவே-வந்து
மே.வித் துயர்செய்யும் என்பதில்லை!
எய்திய எண்ணமும் ஒன்றிருக்கும்;--அதில்
என்றன் நினைவும் மிகுந்திருக்கும்!"
- என்றவன் எண்ணி வருந்தலுற்றன்!-இனி
என்செய்வ தென்றறி யாதிருந்தான்!
அன்ருெரு நாளில் அந் நெய்தலினக்-கண்டே ஆர்ந்த பெருந்துயர் கொண்டவகுய்
நின்றனன் அன்னை அருகினிலே;-அவள் நேர்ந்தது கேட்டிடத் தானழுது
மென்று விழுங்கிய வாறவனும்-வந்து
மேவிய வெம்பழி கூறலுற்றன்!
106