பெருஞ்சித்திரனர்
குன்று வெடித்துச் சிதர்ந்ததுபோல்-ஒரு
கோடிமின் னல்வந் தெரித்ததுபோல், நின்ற கடல் பொங்கி வந்ததுபோல்-கனல்
நீள எரிந்து சுழன்றது போல், சென்ற கதிரற்று விழ்ந்ததுபோல்-ஒரு
சிற்றப் புயல்வந்து சீர்த்ததுபோல், கொன்று சிதைத்துத்தன் ஊனுடலை-பல
கோடிக் கழுகுகள் தின்றதுபோல், 5.
நின்றது போல், அங்கு வீழ்ந்ததுபோல்-விழி
நேருக்கு வேல்வந்து பாய்ந்ததுபோல், சென்றது போல், அங் கிருந்ததுபோல்-அவள்
செத்தது போல், உயிர் வந்ததுபோல், வென்றது போல்,உடன் தோற்றதுபோல்-உடல்
வெள்ளெலும் பெல்லாம் எழுந்ததுபோல், மென்றுதன் ஊன்தசை தான் விழுங்கி-தன்
மேனி அரத்தம் குடித்ததுபோல், ! 6
ஐயையும் பேரிடி காங்கலுற்றள்-இனி
ஆர்வந்து கேற்றினுந் தான் திரும்பாள்!
"பொய்யைச் சுவையென. உண்டுநிதம்வாழும்
போக்கிலிச் சூரர் மறைவரைக்கும்,
மெய்யுக்கு வாழ்வில்லை' என்றுரைத்தாள்!-தன்
. மேனித் தசைவற்ற வெய் ஆயிர்த்தாள்!
கையுக்குக் கையாகக் கொண்டுவிட்டேன்-உயிர்க்
காவல் எனக்கில்லை என்றுசொன்னுள் 7