பக்கம்:ஐயை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞசததரன &

அன்பெலாங் குழைத்தே அத்தான்' என்ருள்! என்பெலாம் உருக்கிய இச்சொல் அவன் செவிப் பட்டதும் உள்ளம் பனியெனக் குளிர்ந்திட "விட்ட நெடுங்கதை வேண்டுமா?" என்ருன். 455 வேண்டா வெனத்தலை யாட்டி விளக்கிள்ை! 'நீண்ட புதுக்கதை நிகழ்த்தவா" என்ருன்; அதனையும் வேண்டா வெனத்தலை யாட்டினுள்! 'இதுகேள் ஐயை, எந்தமிழ் காக்கவும் இந்நிலம் புகுத்திய இந்தியை விரட்டவும் 460 என்னருந் தோழரும் பானும் நிகழ்த்திய நெடும்போ ராட்டமும் நேர்ந்த செயல்களும் கொடுங்கோ லாணேயின் காவலர் கொட்டமும் படிப்படி யாகப் பகரவா?" என்ருன். பிடிப்பிலாப் பேச்சில் பேதை வருந்தி (65 முத்தவாய் திறந்து முறுவல் காட்டி, r "அத்தான் நீங்கள் அன்பைப் பற்றியே அறிகிலீர் போலும்' என்ருள்.

- அவனே குறிப்பினை உணர்ந்து கொண்டான் எனினும் "ஆருடை அன்பை? அன்னே அன்பையா 470 கூறு கின்றன?’ என்றிடக் கோதை 'அத்தை தம்மின் அரும்பெறல் மகன்மேல் வைத்துள அன்பும் அவர்யால் வைத்த உங்களின் அன்பும் உணர்வேன்; ஆனல் உங்களைப் பற்றியே ஓயாமல் எண்ணி 475 உள்ளமும் உயிரும் உடலும் வாடி, கள்ளமில் அன்பைக் காதலாய் வளர்த்துத்

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/40&oldid=1273500" இலிருந்து மீள்விக்கப்பட்டது