இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2 ஆம் பகுதி
செவந்தியோ சிறிது கற்ற
சிறியபெண்; பருவம் வாய்ந்தாள்! நிவந்தபே ரழகி யில்லை;
நிறமில்லை; எனினும் ஐயைக் குவந்ததற் ருேழி! நல்ல
உணர்வுதோய் கனிந்த உள்ளம்1 தவந்தனை யொத்த ஐயை
தனிக்காதல் திறம்.வி யந்தாள்!
சிலமுறை சேரன் வந்து
செம்மலின் வரவு கேட்பான்! சிலமுறை தும்பை எங்கே
சென்றனள் என வி எரிப்பான்| நிலவரை பெயர்தல் போல
நெஞ்சமும் துணுக்குற் றேங்க இலைமறை கிளியைக் காட்டி
எண்ணத்தை மாற்றி நிற்பாள்!
ஐயையும் செவந்திக் கத்தை
அன்பினைச் சொல்வாள்: பெற்றேர் எய்யாத குறையைத் தீர்த்த
ஏற்றத்தைச் சொல்வாள்; தானும் பொய்யாத காதல் நெஞ்சைப்
புரையிலான் தன்மேல் வைத்து நையாமல் நைந்து போன
நயமிலாக் கதையும் சொல்வாள்!
10