இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரகுர்
நினைப்பெழவே மீண்டுமெழுந்
தண்டையில்கண் ணுறங்கும் நித்திலப்பொன் மேனிமகன்
நெற்றியில்கை நீவி, வனப்பவிழ்ந்த முகம்நோக்கி,
வழிந்ததுகில் போர்த்து. வந்தமர்ந்து உடல்சாய்த்தாள்;
வளர்துயிலுங் கொண்டாள்! 6
ஆங்கவளும் அமைதியுடன்
ஆழ்ந்துறங்கும் வேளை, "ஐயை'எனும் குரல்கேட்டே'
அதிர்ந்தெழுந்து நின்ருள்! ஒங்குகதிர் மேலெழுந்தே
ஒளிவெள்ளம் பாய்ந்த உணர்வின்றித் தான் துயின்ற
நிலைகடிந்து கொண்டாள்! தாங்குவெயில் தனையறிந்து
வெளிப்பாய்ந்து வந்து: தன் பெயரை யழைத்தகுரல்
தனக்குரியார் யாரென் றேங்குமுளத் தோடிரண்டு
விழிசுழற்றிக் கண்டே இறும்பூது கொண்டதிர்ந்து
மெய்ம்மறந்து போனள்! 7
19