இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயை-2-ஆம் பகுதி
நிற்கவைத்துப் பேசுமொரு
நினைவுவந்த பின்றை, "நிற்கின்றீர், வாருங்கள்:
நம்வீட்டிற்” கென்றே. பொற்கையால் அவன்கையைப்
பொதிந்தழைத்துப் போனள்! பூப்பாயை விரித்தமர்த்திப்
புறம் அமர்ந்து கொண்டாள்! கற்கையிலாக் கற்பமைந்த
கன்னிமைசேர் தெய்வம், கவின் தும்பை யிறந்ததற்கும்,
தாய்மறைந்த தற்கும், சொற்களிளுல் எடுத்தியம்பாப்
பெருந்துயரம் சாற்றிச் சொல்மழலைச் சேரனேயும்
ஆங்கெழுப்பி விட்டாள்!
வடிந்ததுயர் அத்துணையும்
வழித்தெறிந்த பின்ன. வார்குழலேத் தான்முடித்து, சேலைசரி செய்து, படிந்ததுயர் முகங்கழுவிப்
பசுமஞ்சள் பூசி, பார்த்தெடுத்த முல்லே முகை
கோத்தெடுத்துச் சூடி
22