பக்கம்:ஐயை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

சிற்றிடையாள் செவந்திதின்ருள்;

உயிர்செகுத்த காட்சி சிறிதேனும் நடந்ததுபோல்

தோற்றமெதும் இல்லை! உற்றகுடில்; ஒட்டைப்பாய்;

உருண்டிருந்த பாண்; ஒருபுறத்தில் கொடியினிலே

உலரவைத்த சேஇல; பற்றவையாப் பாழடுப்பு:

பழையவெறுஞ் சால்கள்; பக்கத்தில் உருண்டுறங்கும் பால்மூகத்துச் சேரன்! முற்றிலுமே நிகழ்ந்தவெல்லாம்

கனவென்றே உணர்ந்து, முன்னிருந்த தோழியின்தோள்

முகம்பதித்தே அழுதாள்! 20

கொட்டிலிலே கட்டிய ஆ

குரல்கொடுக்கும்; ஆட்டுக் குட்டிகளோ இங்குமங்கும் குதித்துவிளை யாடும்! வட்டியின்மேல் முதல்மிதக்கும்

வறியவனப் போல வாழ்க்கையெலாம் வெறுமையெனும் வழக்குணர்ந்தாள் நங்கை1

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/98&oldid=1273559" இலிருந்து மீள்விக்கப்பட்டது