பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 6 Ó 57 57 罗罗总 பிச்சை வாங்கச் சொல்ல வில்லை கச்சை தொட்ட தெய்வம் உண்மை கிடையாத தொழில் பண்ணிக் கொள்ள . வேண்டாம்” யோகக் காரன் நீ யென்றே போகச் சொல்லி விட்டான் வீணுதி வீணன் நினைத்தல் எண்ண முள்ள புண்ணியத்தை நண்ணியல்லோ வந்தேன் இட்டமாக ஆண்ட வீடு மொட்டையாகிப் போச்சு எந்தனுட கால வினைதான் இந்தப் படியாச்சு தென்று காட்டு வழி கேட்டு வள்ளியூர் நாட்டுவழி வந்தான் வள்ளியூர் வருதல் மத்தக மதக் களிறு கத்துகின்ற கோட்டை மல்லருட வாசல் விட்டு மெல்ல வந்தான் ஏகாந்த வன்னியர் களெங்குஞ் செருமிய வாசல் ஏத்த தெருவிலக் கிடக்கின்ற ஒட்டை யெடுத்து மங்கலப் பெண்களிருக்கின்ற கூடத்து வாசல் மாதா வே பிச்சை யிடம்மா’ எனவே உரைத் தான் கூடத்துக் கட்டிய சங்கிலி நாயுங் குலைக்க கோல் கொண்டு சின்னக் குழந்தைகள் குண்டியில் குத்த மூடிக் கிடக்கின்ற காடிக் கஞ்சி விடு முன்னே பிச்சையெடுத்தான் முக்குருணி குண்டு வெள்ளட்டி வார்த்தது மூக்கில் சஞ்சி புளிக்குப் பருக்கை யஞ்சாறு கலந்து கையோட்டில் விட்டவள் தள்ளி யடைத்தாள் கதவை மிஞ்சின நீரைக் கொண்டு சென்ருனே பின்னுமோர் வீட்டில் நீக்குங் கதவுக் கப்பால் நின்று சத்தத்தை விட்டான் கூப்பிட்டாப்பிலே "குத்து, வெட்டு, கொல்லும்” என்று கோவித்து வாசல் கதவிலெறிந்தான் குறட்டால், சாப்பிட்டது போது மென்று கண் காணுமல் தப்பி தள்ளாடி தள்ளாடி பின்னு மொரு வீட்டில் சேர்ந்தான் கிறக்கப் பொழுது மங்கிருக்கப் போகாது என்றே எரிகின்ற கும்பியை நெத்திக்கும். நெஞ்சிக்கு மிட்டான் முக்குறுணி-தானிய அளவை 3 மரக்கால் வெள்ளாட்டி-வேலைக்காரி