பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛等爱 கட்டிக் கொண்டு மன்ருடி கிட்டநின்ற பேர்கள் கச்சக்காலடித் திட்டாலும் வைச்ச காசு கடுமா 'பேசியந்தக் கூட்டத்தார்கள் கஞ்சி வாங்கிக் கொடுத்தார் 340 பொரளி கிணத்தங் கரையோரம் பிடித்தே சென்ருன் பாச முடன் அப் பெண்களைப் பார்த்தவன் படிக் கல்லிலே வத்திடுங்கோ, குடத்துக் கொருகாசு பாண்டியன் மேலானையிட்டால் தோண்டி போய் போமா? பட்டுச் சட்டைக் காரனைத் தட்டிப் பேசப் போமா? வேண்டுவானே காசெனவே கூடிப் பெண்கள் நிற்க மேலுங் குடங் கொண்டு வந்தாள் காளிங்கன் வெள்ளாட்டி குடந்தனையு மிறக்கி வைத்து,நடந்த செய்தி கேட்டாள் 'கோட்டிக்காரன் பேச்சல்லாமல் சீட்டுக் கேட்டதுண்டா? விடிந்து போச்சுதென்ருே காசு முடிந்து போக வந்தாம்! 350 வேண்ட மாட்டானெண்டி பெண்கா தோண்டி’ போடுன்ெருள். துட்டுத் தடியை அசைத்துக் கிட்ட வந்து நின்று 'சூரத்தனமாய்ப் பேசினயே கோதிக் கொள்ளுவாயே! குட்டச்சி சொல் கேட்டால் குடம் கொண்டு போகமாட்டீர். கொள்ளக் குறையாக்க வந்த சூர்ப்பனகை யென்ருன்!” 'முண்டச்சிகள் காலில் மிதிபட்ட கொண்டைக் காரன் 'வாரியலைப் போலப் பரந்த மீசை தன்னைப் பாரும் காவிப்பாக்குப் போட்டுக் கொண்டான் சோவிப் பல்லுக்காரன் காளிக்குப் பலி கொடுங்கோ மூளிக்கிடாய் தன்னை வாவிக்கரைப் பெண்களைச் சேவிக்கவோ வந்தாய் 3 60 மாப்பிள்ளைக்கு ஆகுவாயோ பேய்ப்பறச்சி மகனே நாட்டிலே குடக்காக வாங்கும் பொட்டைப் பிணமே நீ நாய்க்கும் பேய்க்கும் வள்ளியூரில் மூப்புவந்து போச்சோ ஊட்டி தெறிக்க கிணத்துக் குள்ளே தள்ளிப் போட்டு உண்டைக் கல்லைத் தானெடுத்து மண்டையில் போடென்ருள்.” "கழுத்துக் கட்டி தாணில்லாம கொழுத்துதெ கிடாரி கள்ளக் காளையோடு மேய்ந்து துள்ளிக் கொள்ளலாச்சே 342 - குடத் தண்ணிருக்கு ஒரு காசு வசூலித்தான். இதற்குக் குடக் காசு என்று பெயர் 345 வெள்ளாட்டி - வேலைக்காரி 349 -364 முதல் 20 அடிகள் வீன திவீணனுக்கும் காளிங்கன் வீட்டு வேலைக்காரிக்கும் நடக்கும் வாய்ச்சண்டை