பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置42G ( 1 4 4 0 வேறே அவர்க்குச் சொல்லி மங்கலியம் போனர் விதித்த விதி தப்பாமல் விதித்து ஒளவையார் மழையில்மழையில் நனைந்து ஒளவையாரும் விறைத்து வரக் கண்டு வண்டு கட்டுஞ் சேலை கொடுத்தண்டையாலே இருத்தி பழக்கி வைத்த கூழ் சுண்டைக்காய் இலைக்கறியும் பசியாத்தும் இடைப் பெண்ணுக்கு முசியாமல் கடகம் கொடுத்தாள் கடகம் தன்னைக் கழற்றி விட்டு ஒளவையார் போமளவில் காவலவர் சேரனுட ஆணை வாழச் செல்ல "கடகவளை இளமுலையிர் தண்ணீர், தா' என்ன-, வந்து தண்ணிர் குடிக்க வளைக்கை தன்னைக் கண்டார் கண்டதற்பின் பெண் கொடியைக் கவிழ அங்கே தள்ளி காவலர் திரு முன்பே கோல் கொண்டு அடித்தார் வண்தமிழ் சேர் ஒளவையாரும் மலங்கி விழுந்தழுது "மகளே ! நீ யஞ்சாதே மன்னவர் முன்பே வாடி’ (என்ருர்) சென்ற ஒளவையார் சேர சோழ பாண்டியர்கள் முன்னே செப்ப முடன் கவிபாட...... நன்றியுடன்......கொடுப்பேன் என்ன நல்ல மொழி ஒளவையார்க்குச் சொன்ன மொழி கேட்டு செப்பமுள்ள சேர சோழ பாண்டியர்கள் கூடி செந்தமிழைப் பாடி வந்த ஒளவையார்க்காக ஒப்பமுள்ள குன்றங் கோன் மகள் தனையும் அழைத்து உத்த இடத்துக்கு வேண்டத்தக்க தெல்லாம் கொடுத்து உபகாரமாக மன்னன் முப்பந்தலும் இட்டு ஒக்க இருந்து முகிழ்த்தம் ஒன்று போல நடத்தி ஒளவையார் முன்னிலையில் பெண்ணுக்குக் கலியானம் முகித்த அப்பந்தல் காண் மன்னவனே, முப்பந்தல் காண்” என்ருர், சீரார் மன்னவர்கள் திருமஞ்சனம், பொலிந்து தேவகாலம் கூடிய மூர்த்தத்துக் கூடி பச்ச நீல வச்சிர வண்ணப் பல்லக்கின் மீதிருந்து பக்க மதயானை சூழ் முப்பந்தல் கடந்தார், கடந்த படையும் தொடர்ந்த கூழைப்பாளையமும் கூழைப் பாளையமும் செய்து கடைத் தெருவும் வைத்தார் அரசன் முப்பந்தல் என்னுமிடத்தில் தங்கி, இப்பந்தலை முப்பந்தல் வரலாறு கூறுகிறன், அவ்வூர் ஒளவையாரோடும், சேர சோழ பாண்டியரோடும் தொடர்பு படுத்தப்படுகிறது: (அது 1407 வரியிலிருந்து 1460 முடிய சொல்ல்ப்படும்.)