பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/35

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

33 |  வெள்ளியங்காட்டான் 



                   |20.09.1949
             சந்தேகவுண்டம்பாளையம்

அன்னையின் உடல் நிலை

    என் அன்புள்ள குழந்தாய் நலம், நலமே விளைக!
      உன் அன்னையின் உடல் நிலை ஓரளவு தேவலை, இன்னும் பலவீனம் நிறைய இருக்கிறது. தினமும் மருந்து சாப்பிட்டுக் கொண்டு வருகிறாள். பாலுக்காக ஆடு ஒன்று வாங்கி இருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் சுகமாக வேண்டுமென்று எதிர்பார்க்கும் வியாதியல்ல இது. நீண்ட நாள் சர்வ சாக்கிரதையுடன் கவனித்துக் கொண்டிருக்க வேண்டியது. சாவகாசமாகத்தான் அங்கு வரமுடியும். நீ சிங்காநல்லூருக்கு அடுத்து வருவதாக இருந்தால் முன் கூட்டி எழுது. மெல்ல

அனுப்பி வைக்கிறேன். உன் உடம்பை நன்றாகப் பாதுகாத்துக்கொள். மனோகரன் அடிக்கடி கடிதம் எழுதுகிறான். அடுத்த 22ம் தேதி வாக்கில் இங்கு வருவதாக எழுதியிருக்கிறான். நளினி நன்றாகப் படிக்கிறாள். நளவெண்பாவில் ரொம்ப பாடல்கள் பாடம், கதை சொல்வதில்