இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
76 | ஒரு கவிஞனின் இதயம்
25.10.1961
இரத்தினபுரி காலனி
நான் என்னை மாற்றிக்கொள்ளப் போவதில்லை!
அருமை மனோகரன்,
உன் கடிதம் கிடைத்தது. அடுத்த விடுமுறையில் நீ இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்.
இரவல் வீட்டை கைவிட்டதன் பயனாக இங்கு எனக்கு ஒரு சொந்த வீடு தயாராகிக் கொண்டிருக்கிறது. என்னை இங்குள்ள மக்கள் ஓரளவு புரிந்து கொள்ள சற்று காலம் நீடித்து விட்டது. தம்மை மூடிக்கொண்டிருக்கும் காரிருளுக்கு ஒரு கைவிளக்காக தினமும் நான் செயல்படுகிறேன்.
எதைக் கற்றுக் கொள்ள நீ விரும்புகிறாயோ, எதைச் செய்ய உன் மனம் உன்னைத் தூண்டுகிறதோ அவற்றை நீ கற்பதிலும், செய்வதிலும் என் அனுமதி உனக்குத் தேவையில்லை. அது உன் சொந்த விசயம்.