பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/96

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

94 |  ஒரு கவிஞனின் இதயம்

கோழிகளை எல்லாம் நான் விற்றுவிட்டேன் ஒரே ஒரு குஞ்சு மட்டும் மீதி விட்டிருக்கிறேன் தற்போது எனக்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லை வெறும் ஆள். எப்போது வேண்டுமாயினும் நான் புறப்பட்டுவர இயலும். ஆனால் அங்கு வந்து என்ன செய்வது? எங்கே இருப்பது? என்ற ஐயங்கள் கூடவே எழுகின்றன. என் மனதிற்கு நானே இன்னும் சமாதானம் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. எதற்கும் அடுத்த கடிதத்தில் விவரமாக எழுதுகிறேன்.

உன் அப்பா

வெள்ளியங்காட்டான்.