பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

ஒரு கோட்டுக்கு வெளியே ...



பீடி ஏஜெண்ட் ராமசாமி "ஒனக்குப் பணமுல்லன்னு சொல்லுறத யாரும் நம்ப மாட்டாங்க. ஒன் சங்கதியும் வருமானமும் எனக்குத் தெரியும்" என்றான்.

அவன், எதை மறைமுகமாகச் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட உலகம்மை. "ஒன் அக்காள மாதிரி புத்தி எனக்குக் கிடையாது" என்றாள். ராமசாமியின் அக்கா ஓடிப் போய்விட்டாள். அதுவும் கல்யாணம் ஆன பிறகு.

உடனே, சபையில் பெருங்கூச்சல்.

"உலகம்மை, எப்படி அவன் அக்காளை இழுக்கலாம்? அவன் ஏதோ தற்செயலாய் அவள் சட்டாம்பட்டியில் தினமும் வேலைக்குப் போய்க் கூலி வாங்குவதைச் சொல்கிறான். திருடிக்குத் திருட்டுப்புத்திங்றது மாதிரி இவா ஏன் வேற அர்த்தத்துல எடுத்துக்கணும்?" சில நிமிடங்கள் வரை, யார் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை.

  • அவா என் அக்காள எப்டி இழுக்கலாம்? நீங்க கேட்டுத் தாறியளா, நானே கேட்டுக்கட்டுமா?" என்று ராமசாமி குதித்தான். "பொறுல பொறுல" என்று மாரிமுத்து நாடார் பெரிய மனுஷன் தோரணையில் பேசினார். "அவாதான் அறிவுகெட்டுப் பேசினா நீயுமா பேசுறது? இருடா இருடா" என்று பலவேச நாடார் பாசாங்கு போட்டார்.

கூட்டத்தினர் தங்களுக்குள் பேசியதை அடக்குவதற்காக, அய்யாவு இரண்டு தடவை கனைத்துக்கொண்டு, அந்த வேகத்திலேயே பேசினார். "ஒலகம்மா ஒனக்கு வாயி வளந்துக்கிட்டே போவுது. ராமசாமி அக்காளப் பத்திப் பேச ஒனக்குச் சட்டமில்ல. இப்ப விவகாரம் என்னென்னா நீ ஏன் அபராதங் கட்டலங்றதுதான். அவங்க அவங்க நிலத்த அடச்சிக்கிட்டது ஊரு விவகாரம் இல்ல. பாதையில் கழிசல் கிடக்குங்றது சின்ன விஷயம். அதையும் பேசுவோம். அதுக்கு முன்னால நீ ஏன் அபராதங் கட்டல என்கிறது தெரியணும். அதுக்கு அடுத்தபடியா ராமசாமியோட அக்காள ஏன் அனாவசியமா சப மத்தியில் பேசுனங்றது தெரியணும். அப்புறம் நீ சொல்றத விசாரிக்கணும். பதில் சொல்லு. எதுக்காவ அபராதம் கட்டலா?"

உலகம்மையால், எரிச்சலை அடக்க முடியவில்லை . அவள் படுகிற பாடும் படுத்தப்படுகிற விதமும். ஒவ்வொருவருக்கும் தெரியும். 'எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயத்த தெரியாதது மாதிரி மூடி மறைக்கப்