பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. ஒதுங்கி வாழ்ந்து...

சிரோஜாவின் திருமண நாள் நெருங்க, நெருங்க, உலகம்மை மீது மட்டில்லாக் கோபங்கொண்ட மாரிமுத்து நாடார் என்ன பண்ணினாலும் கவலைப்படாமல் திரியும் உலகம்மையைப் பழிவாங்க முடியாததுபோல் தோன்றியதை தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக்கொண்டார். சரோஜா வேறு, “கடைசில தங்கப்பழந்தானா எனக்குக் கிடைக்கனும்?” என்று அய்யாவுக்குக் கேட்கும்படியாய் அழுததை, அவரால் மறக்க முடியலாம்; ஆனால் உலகம்மையை மன்னிக்க முடியாது.

ஊர்க்கூட்டத்தில் அய்யாவுவை கைக்குள் போட்டுக்கொண்டு. ராமசாமியின் gpt), கணக்கப்பிள்ளையின் மூலமும் உலகம்மையை, திட்டமிட்டபடி உசுப்பிவிட்டு வெற்றி பெற்ற அவர், பலவேச நாடாரிடம் தோற்றுப்போனதை நினைத்து உள்ளுக்குள்ளே புழுங்கிக்கொண்டார். ஊர் பகிஷ்காரம், குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். சிலர் “கொசுவ அடிக்கதுக்கு கம்பு தேவையா? ஒருத்திய தள்ளி வைக்கது ஊருக்குத்தான் கேவலம்” என்று பேசுவதாகக் கேள்விப்பட்டார். அவர் அப்பப்போ பொட்டப் பயலுகன்னு சொல்லிட்டாளே என்று ஊர்க்காரர்களுக்கு உத்வேகம் மூட்டினாலும். கொஞ்சம் பயப்படத் துவங்கினார். யாரையும் அதட்டிப்பேச முடியவில்லை. ஒருசமயம், வாங்குன கடனைக் கொடுக்காத ஆசாமி ஒருவர் “நீரு இப்டி திட்டினா உலகம்மையோட வீட்டுக்குப் போவேன்” என்று கூட அதட்டினார். ஆக, உலகம்மையோடு யாராவது பேசினால், அது மாரிமுத்து நாடாருக்கு எதிரான செயலாக, அவர் நினைக்காமலே, ஊர் நினைக்கத் துவங்கியது. பச்சையாகச்

சொல்லப்போனால், மாரிமுத்து - உலகம்மையின் தனிப்பட்ட விவகாரம் ஊர்மீது அனாவசியமாகச் சுமத்தப்பட்டது போலவும், போனால் போகிறது என்று ஊர்க்காரர்கள் பற்களைக்

கடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு அபிப்பிராயம் நிலவி வருவதாக, பலவேச நாடார், அவரிடம் தம் அபிலாஷையை அதில் சேர்த்துச் சொன்னார். உலகம்மை அந்த ஊரில் இருக்கும் வரை, அவரது மரியாதை நிலையாக நீடிக்காததுபோல் அவருக்குத் தோன்றியது.

ஆகையால்தான், பலவேச நாடாரிடம், உலகம்மையின் வீட்டுக் கூரையைப் பிய்த்துப் போட்டுவிடும்படி சொன்னார். பலவேசத்திற்கு.