பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

ஒரு கோட்டுக்கு வெளியே ...


கால் போட்டு அதற்குள் தலையை வைத்துக்கொண்டு, முடங்கிப்போய் உட்கார்ந்திருந்தாள்.

‘என்ன பண்ணலாம்’ என்று யோசித்துக்கொண்டும், எல்லாரும் தன்னை, தான் கொண்ட முன்லிப் உத்தியோகத்தைப் பெரிதாக நினைத்து, எஜமானனாக நினைக்கையில், ஒரு எச்சிக்கலப்பய மவா, வந்தட்டிப்பய பொண்ணுகிட்ட, வேலைக்காரன் மாதிரி போவ வேண்டியதிருக்கே என்று முன்லீப் முனங்கிக் கொண்டிருக்கையில், சுற்றி நின்ற கூட்டத்தில் ஒருவர். “அவா சொல்றது மாதிரி நீரு எல்லாத்துக்கும் பொதுவான மனுஷன். போயிட்டு வாரும்” என்று உபதேசம் செய்தார். முன்லிப்பும் “அதெப்படி?” என்று சொல்லிக்கொண்டே, கூட்டத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, பெரிய மனது பண்ணிப் போவதாகப்போக்குக் காட்டிக்கொண்டு புறப்பட்டார். புறப்பட்டவருக்கு. தனியாகப் போகப் பயம். இன்னொரு உத்தியோகஸ்தரான கணக்கப்பிள்ளையைத் தேடியலைந்து கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து, நழுவப்போன கர்ணத்திடம், உலகம்மை பாணியில் பேசி, நண்டுப்பிடி போட்டுப் பிடித்துக்கொண்டார். இருவரும், ஒட்டுக்கணக்கில் லயித்திருந்த பஞ்சாயத்துத் தலைவரையும், பலவந்தமில்லாமல் சேர்த்துக்கொண்டு, கால எமது தன் போல் போனார்கள்,

தலைவர்கள் தலைதெறிக்கப் போவதைப் பார்த்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்ட ஊர்மக்களும், ஒன்றாகத் திரண்டு, அவர்கள் பின்னால் போனார்கள். பின்னால் போனவர்கள் பிறகு முன்னால் போய், தலைவர்கள் தோட்டச் சுவரில் ஏற முடியாததை உணர்ந்துகொண்டு. உலகம்மையின் வீட்டுக்குக் கிழக்கே இருந்த செருவையை இடித்து நொறுக்கி, தலைவர்களுக்கு வழியமைத்துக் கொடுத்தார்கள். பிறகு, சற்றுத் தொலைவில் போய் நின்று கொண்டார்கள்.

மூன்று தலைவர்களும், உலகம்மையின் குடிசைக்குப் போனார்கள். மாயாண்டியை உற்றுப் பார்த்தார்கள். கணக்கப்பிள்ளை மட்டும், சிவ சிவா என்று சொல்லிக்கொண்டு, அவர்களைப் பார்த்தும் எழுந்திருக்காமல், மூலையோடு மூலையாகச் சாய்ந்து கிடந்த உலகம்மையை நோட்டம் விட்டுக்கொண்டார். கிராம முன்சீப், தான் உலகம்மைக்கு ஒன்றும் வேலைக்காரன் இல்லை, ஒரு முன்சீப் என்பதைக் காட்டிக்கொள்ளும் வகையில், பிரேத விசாரணைக்கு வந்திருப்பவர்போல், அதட்டிக் கொண்டார்:

“உலகம்மா, அய்யா எப்டிச் செத்தார்? எப்போ செத்தார்?”