பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"தடியா? ஒல்லியா?"

"ராமசாமி மாதுரி ஊதிப்போயி இல்ல. வெள்ளச்சாமி மாதுரி ஒடிஞ்சும் விழல. அளவான தடி."

"சும்மா சொல்றியா, நிசமாவா..."

"சொன்னதுல்லாம் சத்தியம். அவரோட செருப்பப் பத்தி சொன்னமில்லா அதுவும் நெசந்தான்..."

"பாக்காமே போயிட்டேன். நல்ல வேள நீ நல்லா பாத்திருக்க."

"இன்னும் பத்து நாளையில ஆறஅமர ராத்திரியும் பகலுமா பாக்கப் போற. ஆக்கப் பொறுத்தவா ஆறப் பொறுக்காண்டாமா?"

"என் அம்மா மட்டும் இதையும் தட்டி விட்டான்னா தெரியும் சங்கதி. அவரு வீட்டுக்கே ஓடிப் போவேன்..."

சரோஜா தலை குனிந்து கொண்டே சிரித்தாள். மாப்பிள்ளைப் பையன் வருகிறானா என்ற சந்தேகத்துடனும், வரவேண்டும் என்ற அபிலாஷையுடனும், உலகம்மை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். பிறகு ஆவலை அடக்க முடியாமல், சரோஜாவிடம் சில விவரங்களைக் கேட்டாள். சரோஜாவும் சளைக்காமல் பதில் சொன்னாள்.

"மாப்பிள்ளக்கி எந்த ஊராம் அக்கா...?"

  • சட்டாம்பட்டி..."

"எவ்வளவு படிச்சிருக்காராம்...?"

"எம்.ஏ.வாம்."

"பேரு என்னவாம்?"

"சும்மா சொல்லுக்கா. புருஷனா ஆனபெறவுதான் பேரச் சொல்லப் படாது. இப்பச் சொல்லலாம்..."

"இப்பச் சொன்னா அப்பறம் வரும்..."

"பரவால்ல சொல்லுக்கா..."

"மாட்டேன். வெட்க..."

"அட சும்மாச் சொல்லுக்கா, ஒங்களுக்குப் பேர்ப் பொருத்தம் இருக்கான்னு பாக்றேன்..."