பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. ஓட நினைத்து....

ரு நாள் முழுதும் உலகம்மைக்கு நிம்மதியில்லை... லோகுவைச் சந்தித்ததால், திருமணம் நின்று போன செய்தி வந்தாலும் வரலாம் என்று உள்ளூரப் பயந்து கொண்டிருந்தவளுக்கு, இப்போது போன உயிர் வந்துவிட்டது. மாரிமுத்து நாடார் வீட்டில், கல்யாண வேலைகள் தங்குதடையின்றி நடந்துவந்தன. தினமும் காலையிலும், மாலையிலும், சரோஜாவைப் பார்த்து, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, வேலைவெட்டிக்குப் போகும் அவளால் நேற்றுப் போக முடியவில்லை. ஏதோ ஒரு குற்றம் செய்துவிட்ட உணர்வில் தவித்தாள். ஆனால் அவள் பயந்தது மாதிரி எதுவும் நடக்காததால், மாரிமுத்து நாடாரின் வயலுக்குப் புறப்பட்டாள். போகிற வழியில் அவர் மகளைப் பார்க்கலாம் என்று நினைத்தாள். பிறகு சாயங்காலம் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று தட்டிக் கழித்தாள்.

நார்க்கட்டிலில் ஒருக்களித்தவாறு படுத்துக்கொண்டு, மூட்டைப் பூச்சிகளை நசுக்கிக்கொண்டிருந்த அய்யாவின் தலையில், அவர் எதிர்பார்க்காத தருணத்தில், சட்டியில் காய்த்து வைத்திருந்த விளக் கெண்ணையை எடுத்து, அரங்கத் தேய்த்தாள். அவர், "பாத்தும்மா, தல புண்ணாயிடும்" என்று சொல்லிக் கொண்டார். உலகம்மை தலையைப் பிடித்தபடி, அவருக்குத் தன் தலை இன்னொரு மூட்டைப் பூச்சி போல் தெரிந்திருக்க வேண்டும்.

புறப்படப்போன உலகம்மை, அய்யா அவளை அர்த்தத்துடன் பார்ப் பதைக் கவனித்துலிட்டு, "என்னய்யா விஷயம்" என்றாள்..

"போறவள மறிக்கப்படாது, போயிட்டு வா."

"எதையோ சொல்ல வந்தியரு?"

"ஒண்ணுமில்ல, கலக்கமா இருக்கு."

"கலங்கலா? இனிமே ஒழுக்கு அதுக்குக் காசு கெடயாது. மெட்ராஸ்ல வார்னிலையோ எதையோ குடிச்சிட்டு நிறய முட்டாப்பயமக்க செத்துப் போயிட்டாங்களாம். இனிமே அந்தச் சமாச்சாரமே பேசப்படாது."

உலகம்மை வெளியேறினாள், 'விளக்குழிக்குள்' இருந்த கலையத்திற்குள் இரண்டு மூன்று ரூபாய் இருப்பது அய்யாவுக்குத்