பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒட நினைத்து...

49



"என்ன பூ. உலவு, ஒனக்கு லக்கி அடிச்சி. அன்னிக்கி என்னடான்னா மாரிமுத்து மச்சான் கூப்புட்டாரு. இன்னிக்கு பிராந்தன் கூப்பிடுறான். ஒன்பாடு தேவல. குறுக்க நிமுத்த முடியாம கஷ்டப்படாண்டாம்" என்றாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.

"பிராந்தன அங்கயே போயி பாருக்கா. இங்க வந்தாமுன்னா வேலயில இல்லாத குறல்லாம் சொல்லுவான்” என்றாள் இளம்பெண் ஒருத்தி. அவள் கல்யாணமாகி, ஒரு, பிள்ளைக்குத் தாயானவள். கல்யாணமாகாத உலகம்மையை 'அக்கா' என்றழைத்து, தனக்கு இன்னும் இளமை இருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்பவள்.

"ஒன்பாடு லக்கிதான். கிளம்பு ஒலவு. இந்த பிராந்துப்பய இங்க கத்தறது மெட்ராஸுக்குக் கேக்கும் போலிருக்கு. மாரிமுத்து கல்யாண வீட்ல இவன ஆடச்சொன்னா நல்லா ஆடுவான். செலவும் மிச்சம். என்ன ஒலவு, எதுக்குக் கூப்பிடுறான்?"

உலகம்மை, நாற்றுக்கட்டுத் தீரட்டும் என்று நினைத்தவள் போல், அவன் கூக்குரலைப் பொருட்படுத்தாமல் நட்டுக் கொண்டிருந்தாள். கட்டில் மிச்சத்தை மற்றவர்களிடம் கொடுக்க அவள் இஷ்டப்படவில்லை. "மாரிமுத்து மாமா வீட்ல இன்னிக்கு சொக்காரங்க ஆக்கிப் போடுறாவுளாம். அண்டா குண்டா கழுவ கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருப்பார்" என்று உரக்கச் சொல்லிக் கொண்டே, வயல் நீரில் நாற்றுமீது படாமல், கையைக் கழுவிக் கொண்டிருந்தாள்.

வெள்ளைச்சாமியால், இப்போது குத்துக்காலில் இருந்து கத்த முடியவில்லை. தொண்டை வலித்திருக்க வேண்டும். வயலுக்கே வந்தான்.

"ஏய் உலகம்மா, நான் சொல்றது காதுல விழல?"

"இரேன், அப்பாவு. என்ன மாடுன்னு நினைச்சியா மனுஷின்னு நினைச்சியா?"

"நீ மாடும் இல்ல. மனுஷியும் இல்ல. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யுற திருட்டுத் தேவடியா. அடுத்துக்கெடுக்கற, பனையேறிச் செறுக்கிமவா. வயலுக்குள்ள ஏமுழா போன? ஒப்பன் வயலாளா? இல்லன்னா ஒன் வைப்பாளன் வயலாளா? எத்தனாவது சட்டத்துலழா வயலுக்குள்ள வரலாம்? வாரியா, இல்ல..."

உலகம்மை திகைத்துத் திக்குமுக்காடிப் போனாள். அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை. தலை விண்ணென்று தெரித்தது. நெஞ்சு