பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓட நினைத்து...

51



வார்த்தைகளால் பேசிக்கொண்டே போனான். உலகம்மையால் பொறுக்க முடியவில்லை.

"வெள்ளயா, மரியாதி குடுத்து மரியாதி வாங்கு. முப்பத்திரண்டு பல்லும் உடஞ்சி போவும். ஜாக்கிரத."

"யாருக்கு உடையுதுன்னு பார்த்துடலாமுழா."

"என்ன எதுக்குல அவமானமா பேசுற?"

"நீ எதுக்கிழா சட்டாம்பட்டிக்குப் போன? எந்தக் கள்ளப்புருஷனப் பாக்கப் போனழா? இந்த ஊர்ல ஆம்புள கிடைக்கலன்னா அந்த ஊருக்குப் போன? எச்சிக்கல தேவடியா. எங்க பெரிய்யா வயலுல்ல நாய்மாதிரி வேல பாக்கிற 'வாங்கிக் குடிச்ச' கூலிவேல பாக்கிற செறுக்கிக்கு. இவ்வளவு திமுரு இருக்குமுன்னா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்? வயல்ல ஏமுழா நிக்கிற? பனையேறிப்பய மொவள."

நாற்றுக்கற்றைகளைப் போட்டுவிட்டு, வாய் பிளந்தவாறு நின்ற 'பொம்பிளைகளால்' இதற்குமேல் பொறுக்க முடியவில்லை. 'தனக்கு வந்தாத் தெரியும் தலைவலியும் நோயும்' என்பது மாதிரி: "வாங்கிக் குடிச்சி", "கூலிவேல பாக்குற செறுக்கி" என்பன போன்ற வார்த்தைகள் தங்களையும் தாக்குவதை உணர்ந்திருந்தார்கள். சிறிதுநேரம் அந்த பிராந்துப் பூனைக்கு எப்படி மணிகட்டுவது என்று யோசிப்பதுபோல், கைகளை முஷ்டிகளாக்கி நெரித்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில், ஒரு கிழவி போர்ப்பரணி பாடினாள்:

"ஏய் வெள்ளயா, அறிவிருக்காலா அவள ஏழுல அப்பிடித் திட்டுற? நாய்க்குப் பிறந்த பயல."

"ஒனக்கென்னழா சும்மா கெடயேன். கிழட்டுச் செறுக்கி."

இன்னொருத்தி பிடித்துக் கொண்டாள்; அவள் கிழவியின் அண்ண ன் மகள்.

"யாரப் பாத்துல செறுக்கின்ன? யாருல வாங்கித் தின்னவங்க? இருந்த சொத்தெல்லாம் சைக்கிள் ஓட்டப், பழகுறதாயும் 'பூதுக்கடையிலயும்' தொலச்சிட்டு நாயிலயும் கேடுகெட்ட நாயா, பெரியப்பன் ஊத்துற எச்சிக் கஞ்சிக்கு அலையுற பயலால செறுக்கின்னு கேக்குற? சோம்பேறிப்பய மவன."

"அந்தத் தேவடியாள பேசினா ஒனக்கென்னழா?"