பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

அரசியல் கட்டுரைகள்: சொல்லாடல் கலை


தமிழன் என்னும் வார இதழில் 1907 முதல் 1914 வரை ஏழாண்டுகள் அயோத்திதாசர் எழுதிய அரசியல் கட்டுரைகளின் நிறைகுறைகளை அவர் காலத்திலேயே சுதேசமித்திரன், இந்தியா போன்ற தமிழ் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளோடும் ஸ்டாண்டர்ட் (Standard), மாடர்ன் ரிவ்யு (Modern Review) போன்ற ஆங்கில ஏடுகளில் வந்த கட்டுரைகளோடும் நீதிக் கட்சியினரின் ஜஸ்டிஸ் (Justice) எனும் ஆங்கில இதழில் வந்த கட்டுரைகளோடும் ஒப்பிட்டுப் பார்த்து அறியலாம். பெரும் புகழுக்குரிய தமிழ்க் கவிஞராகிய பாரதியார் 1906,1907, 1908,1909 ஆகிய ஆண்டுகளில் இந்தியா இதழிலும் 1904 முதல் 1906 வரை சக்ரவர்த்தினி இதழிலும் அரசியல், சமுதாயம், சமயம், இலக்கியம் பற்றிய கட்டுரைகளைப் புதுவையிலிருந்து எழுதி வந்தார். ஜஸ்டிஸ் இதழின் தலையங்கங்கள் 1927-இல் சர். ஏ. இராமசாமி முதலியாரால் இலக்கிய நயத்தோடு செறிவான ஆங்கிலத்தில் எழுதப் பெற்றவை.


பாரதியின் அரசியல் கட்டுரைகள் “இந்திய காங்கிரஸ் மகாசபை”, “ஸ்ரீதாதாபாய் நெளரோஜியின் உபந்நியாசம்”, “தாதாபாய் நெளரோஜியின் அட்ரஸின் கருத்து”, “அமைதிக் குணமுள்ள சென்னைவாசிகள்”, “வர்த்தமான கர்த்தவ்யம்”, “சென்னையில் ராஜபக்திக் கொண்டாட்டம்”,“தேசப்பிரஷ்டம்”,“இந்தியாவின் லாபம்”, “அதர்மப் பத்திரிகைகள்”, “பாபு அசுவினி குமாரதத்தர்”, “ஸ்ரீ ஹரி ஸர்வோத்மராவ்”, “கீழ்த்திசையில் ஸ்வதந்திரக்கிளர்ச்சி-அதற்குநேரும்

பீடைகள்”, “ராஜபக்தி உபதேசம் செய்யும்