பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


இருந்துவிடு, செல்வா. நீ விரும்பிய சொந்தக் கார் உனக்குக் இடைத்துவிட்டது. சுகவாழ்வுக்குத் தேவையான வசதிகள் எல்லாம் உனக்கு உள்ளன. நீ ஏன் ஆடிப் பிழைக்க விரும்புகிறாய்? என்று கேட்டான் ஒருநாள்.

அவள் சிரித்தாள். அலட்சியம் தொனித்தது அதில். அகங்காரம் மிதந்தது அதிலே எள்ளிடும் தன்மை நிறைந்திருந்தது. என்னவோ சூடாகச்சொல்ல வாயெடுத்தாள். பின் தன்னையே அடக்கிக்கொண்டாள் தன் நலனை எண்ணி துவண்ட கொடியென நெளிந்து அவன் மீது சாய்ந்து அவன் அருகிலே அமர்ந்து கழுத்தில் கைவளைத்து இனியகுரலில் ரகசியம் பேசினாள்.

‘ராஜா, நமது திட்டம் என்ன? நாம் இவ்வளவு செலவு செய்தது எல்லாம் வீணாகத்தானா? படப்பிடிப்பு வேண்டுமானால் காத்துக்கிடக்கட்டும். நாட்டிய கோஷ்டியைத் தீவிரமாக நடத்தி எங்கும் கற்றிக் கலைநயம் காட்ட வேண்டியது முக்கியம் என்றாள். தன் பேச்சுக்கு அதிக வலு கொடுப்பதற்காக அன்பனின் கன்னங்களில் இரண்டும் இதழ்களில் ஒன்றும் சுடச்சுடப் பொறித்தாள். தனது இதழ்களின் இன்ப முத்திரையைத்தான்!

அப்புறம் அவனுக்குத் திறமை ஏது, துணிவு ஏது அவள் திட்டத்திற்கு எதிராகப் பேசுவதற்கு!

குமாரி செல்வா சுக வாழ்வை மட்டுமே விரும்பவில்லை. பணம், பவிஷூ, படாடோபம், செல்வச் செளகரியங்கள் மட்டும் போதா வாழ்க்கை சிறப்புறுவதற்கு வாழ்க்கைக்கு இவையும் தேவைதான்; எனினும் இவற்றையெல்லாம் விட அதிகமாகத் தேவை புகழ். அது அவசியத்தேவை-இதுவே அவள் இதய ஒலி.

புகழ் வேண்டும். அதிகமாகப் புகழ்பெறவேணும். மேலும் புகழ்...மேலும் மேலும் புகழ்.... மேலே மேலே மேலே-புகழ் வளர்ந்துகொண்டே போகவேண்டும் எல்லையில்லாமலே. அவளது ஆசை அது. அவளுக்கு அடங்காத அடக்க முடியாத-பசி அது.

பசி-எந்த ரகத்ததாக யிருந்தாலும் சரி-மிகுந்து விடுகிறபோது, அதைத் தணிக்கவேண்டும் என்ற ஆசை வ்ளர்கிறபோது, பசியே தணியாத ஆசையாகிப் பின் வெறிநிலை அடைகிறபோது, அந்த வியாதிக்கு ஆளாகிறவர்கள் தங்கள் திருப்திக்காக எந்த வழியையும் கையாளத் துணிந்து விடுகிறார்கள். சந்தர்ப்பம் தங்கள் முன்னால்