பக்கம்:ஒரே இரத்தம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும் ஊர் சிரிக்கும் வேலையில் ஈடுபட்டு அந்தக் காலனியின் மானத்தையே வாங்குவதாக ஒரு பெரிய பிரசங்கமே செய்து முடித்தாள் வீராயி! வீராயியும் முனியாண்டியும் போனதும் மாரி, பொன்னன் செங்கமலம், நந்தகுமார் ஆகிய நால்வரும் வீட்டுக்குள் நுழைந் தனர். தெருவில் அத்தனை பயங்கரமான நிகழ்ச்சிகளும் பேச்சுக்களும் கூச்சல்களும் இருந்தும்கூட வீட்டுக்குள்ளே அஞ்சலை, அமைதியாகப் படுத்திருந்தாள். அவள், இரு விழிகளிலும் கண்ணீர் வழிந்து வழிந்து காதோரம் கொட்டிக் கொண்டிருந்தது. மாரி, அருகே சென்று "அஞ்சலை” என அழைத்தவாறு அவள் நெற்றியில் கை வைத்தார். அவள் உடல் ஜில்லிட்டுப் போயிருந்தது. சில விநாடிகளுக்கு முன்புதான் அவள் கடைசி மூச்சு விட்டிருக்கிறாள். 5 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/71&oldid=1702467" இலிருந்து மீள்விக்கப்பட்டது