பக்கம்:ஒரே உரிமை.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மனக் குறை


ன்று மாலையும் வழக்கம்போல் அழுது வடியும் முகத்துடன் நாராயணமூர்த்தி வீட்டிற்குள் நுழைந்தான். நாடக மேடை ராஜா மாதிரி அவன் தன் குமாஸ்தா வேஷத்தைக் கலைத்துக் கொண்டிருந்தபோது, “இந்தாருங்கோ!” என்று குரல் கொடுத்துக் கொண்டே அவன் மனைவி குமுதம் அங்கே வந்தாள்– கையில் காப்பியுடன் அல்ல; ஏதோ ஒரு கிரஹப் பிரவேசப் பத்திரிகையுடன்.

“வந்துவிட்டாயா, ‘இந்......தா......ருங்கோ!’ என்று வஸந்த காலத்துக் குயில் மாதிரி குரல் கொடுத்துக் கொண்டே?– போ!– பெயரைப் பாரு, பெயரை! குமுதமாம்! உன்னைச் சுற்றிச் சுற்றி வண்டுகள் ரீங்காரம் செய்யாததுதான் ஒரு குறை!– உ.ம்...உன்னைச்சொல்லி என்னபயன்? ஒன்பது வருடமாக நானும் உன் பரட்டைத் தலையையும் எண்ணெய் வடியும் முகரக் கட்டையையும் பார்த்துக் கொண்டு வந்தும் இன்று வரை சந்நியாசம் வாங்கிக் கொள்ளாமலிருக்கிறேனே, அதைச் சொல்லு!” என்று தலையில் லேசாகத் தட்டிக்கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்தான் நாராயணமூர்த்தி.

“பொழுது விடிந்ததும் வீட்டு வேலைகளை எல்லாம் செய்வதற்கு நீங்கள் வேலைக்காரர்களை வைத்திருக்கிறீர்களோ இல்லையோ– நாளெல்லாம் நாவல் படித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/60&oldid=1148977" இலிருந்து மீள்விக்கப்பட்டது