பக்கம்:ஒரே உரிமை.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ஆட்டிவைக்கிறது என்பதை அவருடைய கதைகள் தெளிவாக்குகின்றன. காதல் எதன்மேல், எதுவரையில் என்றெல்லாம் கதைகள் விளக்குகின்றன. கவிதையிலே காவியத்திலே கதைகளிலே சாகாத காதல் வாழ்க்கையிலே பணப் போரில் சாவதை ஆசிரியர் எடுத்துக்காட்டுவது போற்றத்தக்கது. வாழ்க்கையில் உள்ள இத்தகைய உண்மைகளை மறைப்பது குற்றம் என்று ஆசிரியர் உணர்ந்து எழுதுவதற்காக, உலகம் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

இப்படிப்பட்ட சிறந்த கதைகளைத் தெளிவான எளிய தமிழில் உணர்ச்சி வேகத்துடன் எழுதிக் கலைத்தொண்டு புரியும் “விந்தன்” முயற்சி மேன் மேலும் வளரவேண்டும். அவர் ஓயாமல் படித்துவரும் இந்த ‘உலகம்’ என்னும் புத்தகம் நாள்தோறும் புதிய புதிய உண்மைகளை அவருக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும்.

சென்னை,
2-1-'50
மு.வரதராசன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/8&oldid=1150057" இலிருந்து மீள்விக்கப்பட்டது