பக்கம்:ஒரே உரிமை.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

கருவேப்பிலைக்காரி

சொன்னரே, எனக்கும் நூறு ரூபாய்தான் சம்பளம் அடுத்த வீட்டுக்காரனுக்கும் நூறு ரூபாய்தான் சம்பளம் என்று!"

"பார்த்தாயா, அம்புஜம்! இப்படிப்பட்ட மனுஷனைக் கட்டிக்கொண்டு நான் என்ன செய்வது? அன்றைக்குக்கூடச் சொன்னேன், இந்த அழுகிற குழந்தையை வைத்துக் கொண்டு என்னால் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை என்று! 'நான்தான் ஐந்தே ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு பாக்கியை அப்படியே உன்னிடம் கொடுத்து விடுகிறேனே, இன்னும் என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்?' என்று அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டுக்காரன் மாதிரி அலுத்துக் கொண்டாரே, அவர்? சாயந்திரம் வரட்டும்; அவரை என்ன பாடு படுத்தி வைக்கிறேன் பார்!" என்றேன் நான் ஆத்திரத்துடன்.

"நன்றாய்ப் படுத்து! இந்தப் புருஷர்களே இப்படித் தான்! சொல்வது ஒன்று; செய்வது ஒன்று. நிஜமாகவே இவர்கள் இருவருக்கும் நூறு ருபாய்தான் சம்பளம் கிடைக்கிறதோ, இல்லை—அதற்கு மேல்தான் கிடைக்கிறதோ—யார் கண்டது?" என்று மேலும் சந்தேகத்தைக் கிளப்பி விட்டாள் அவள்.

என்னையும் மீறிவந்த ஆக்திரத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டு. "என்னமோ, எல்லாம் அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும்!" என்றேன் நான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, "போய் வருகிறேன்" என்று சொல்வி விட்டு அவள் கிளம்பினாள்.

அதற்குள் குழந்தை ராதையும் நல்ல வேளையாகத் தூங்கி விட்டாள். அவளைத் தொட்டிலில் கிடத்திவிட்டு, நான் அம்புஜத்துடன் வாசல் வரை சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/96&oldid=1149365" இலிருந்து மீள்விக்கப்பட்டது